மாருதியை தினமும் மனதில் நினைத்தாலேபோதும்
பல்லவி
மாருதியை தினமும் மனதில் நினைத்தாலேபோதும் நமக்கு
மனஉறுதியையும், மங்களங்களையும் அளித்திடுவார் வீர
அனுபல்லவி
காரியசித்தி அளித்து, கருணையை மழையாய் பொழிந்து
கண்ணில் இமை காப்பதுபோல் காத்திடுவார் நம்மை வீர
சரணம்
சீதையின் துயர்துடைக்க சிம்சுபா மரகிளையில்,அமர்ந்து ஶ்ரீ
ராம கதையைகூறி கனையாழியை (சீதைக்கு)அளித்த அனுமன்
பாமரரான நமக்கு, தோழனாய், குருவாய், பந்துவாயும் வந்து
காத்திடுவார், ஆஞ்சனேயர், என்றென்றும் சிரஞ்சீவியான வீர