கீர்த்திமான் என்று பெயர் பெற்றே
விருத்தம்
ஆரா அமுதனாய் அலைகடலில் பள்ளிகொண்ட ஶ்ரீமந் நாராயணனே
அன்புடன் பண்பும் வீரமும் நிறைந்த ராகவ சிம்மனாய் அவதரித்தாரே
மாமுனிவரின் வேள்வியை காத்து ஜனகநகர் சென்று வில்லை ஒடித்து
மாதா ஜானகியை மணந்து சீதா ராமனாய் அயோத்தி வந்தடைந்தாரே
தந்தை சொல்லை காத்திடவே சீதை லஷ்மணருடன் கானகம் சென்றாரே
அரக்கனான இராவணன் அன்னை ஜானகியை தூக்கி சென்றானே
அறிவும் ஆற்றலும் தொண்டாற்றும் குணமும் நிறைந்த ஆஞ்சனேயர்
அண்ணலுக்கு உதவியே அவரின் அன்பை பெற்றாரே
ஆஞ்சனேயர் அவரின் அன்பை பெற்றாரே
பல்லவி
கீர்த்திமான் என்று பெயர் பெற்றே உயர்ந்தாரே
கேஸரியின் குமாரனான அந்த சுந்தர ஆஞ்சனேயர்
அனுபல்லவி
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத செயலை
வாயுபுத்திரனான வீரஅனுமன் செய்து காட்டியே
சரணம் - 1
ஆழ்கடலை கடந்து இலங்கை செல்ல உறுதிகொண்டு
ஆதவனை தியானித்தே அந்தோ பறந்து சென்றாறே
ஆர்வமுடன் மாடமாளிகையெங்கும் சுற்றி அலைந்தே
மாதாவை கண்டரே அவர் அஸோகவனம் தனிலே
சரணம் - 2
ஆஞ்சனேயர் ஹே மாதா என கூறி நமஸ்கரித்தே
மோதிரத்தை அன்னை ஜானகியிடம் கொடுத்தாரே
சீதாதேவி அளித்த சூடாமணியை பக்தியுடன் பெற்று
இராவணனைகண்டு இலங்கைக்கு தீ இட்டாரே
சரணம் - 3
சீதாதேவியிடம் அனுமதி பெற்ற அஞ்சனை குமாரரோ
ஆகாய மார்க்கத்தில் பெரும்கடலை தாண்டி வந்தாரே
ஆராத சோகத்தில் ஆழ்ந்திருந்த ரகுராமரை அவர் கண்டு
கைகூப்பி வணங்கி கண்டேன் சீதையை எனக் கூறினாரே
சரணம் - 4
சூடாமணியை சொல்லின் செல்வர் ஶ்ரீராமரிடம் அளித்தாரே
சீதாராமரோ மாருதியை அணைத்து கொண்டாரே நெஞ்சோடு
ஜானகியை சிறைமீட்க மறுகணமே சித்தமாகி அற்புதமாகவே
ஆழ்கடலில் அணைகட்டி அனைவரும் புறப்பட்டனரே
சரணம் - 5
இராவணனை வென்றே தர்மத்தை நிலை நாட்டிய ஶ்ரீராமர்
சீதையை மீட்டு இலக்குவன் ஹனுமன் சனகாதி முனிவரகளுடனே
அயோத்தி வந்து கூடியிருக்கும் யாவருக்கும் ஆசிகள் அளித்தே
தாயார்களின் பொற்பாதங்களில் வணங்கிய பின் சிரஞ்சீவியான
மாருதி தாங்கிய அறியணையில் அமர்ந்தது மணிமகுடம் பெற்ற
பட்டாபிராமரை ராம ராம என சதா ஜபித்து மகிழும் தாஸன்