ஓடோடி வந்திடுவார் ஆஞ்சனேயர்


பல்லவி

ஓடோடி வந்திடுவார் ஆஞ்சனேயர், நம் முகத்தின்

வாட்டத்தை கண்டு, வருந்தியே நமக்கு உதவிடவே

அனுபல்லவி

சீதா சகாயனான வாயுகுமாரன், தன் அபய கரங்களை

நீட்டியே அன்புடன் என்றும் நம்மை தூக்கி விடவே

சரணம்

சிரஞ்சீவியாய், சேவையின் சின்னமாய், ஶ்ரீராம பக்தனாய்

இருகரம் குவித்து நிற்கும் மாருதியை, மனமுருக வணங்கி

ஶ்ரீராம, ஜயராம, சீதாராம என்று கூறி வேண்டினால் போதுமே

ராமா பக்தனான அனுமார் மனம் மகிழ்ந்து நமக்கு அருள்புரியவே