ஒருமுறை அழைத்தால் ஓடோடி வந்திடுவானே


பல்லவி

ஒருமுறை அழைத்தால் ஓடோடி வந்திடுவானே

சிரஞ்சீவியான ஶ்ரீராம பக்த ஆஞ்சனேயனை நாம்

அனுபல்லவி

இரு கைகளை கூப்பி வணங்கினால் போதுமே

தருவான் நமக்கவன் மனோபலத்தையுமே நாம்

சரணம் (1)

வீர தீர பராக்கிரமனாய் திகழும் ராமதூதனான

வரப்பிரஸாதியை சீதாசகாயனான அனுமனை

காரியசித்தியை அன்பர்களுக்களித்து மகிழும்

கருணை உள்ளம் கொண்ட சுந்தரனை நாம்

சரணம் (2)

திருமால் வலம் வரும் அனுமந்த வாகனமாய் திகழும்

சிறிய திருவடி என்று பெரும் புகழ் பெற்ற மாருதி ஶ்ரீ

ராமநாமத்தை சதா ஜபித்தபடி நாமக்கல்லில் நின்றே

வரும் பக்தர்களுக்கு ஆசிகூறும் கேசரிசெல்வனை நாம்