அஞ்சனாதேவி கொஞ்சிடும் சுந்தரன்


பல்லவி

அஞ்சனாதேவி கொஞ்சிடும் சுந்தரன் அவனின்

அருளை பெற்றால் எதற்கும் குறை இல்லையே


அனுபல்லவி

அஞ்சா நெஞ்சனான அனுமன் ஶ்ரீ ராமனின் தூதன்

ஆழ்கடலையும் கடந்து அன்னை சீதையை கண்ட


சரணம்

சஞ்சீவி மலையை தூக்கி வந்தவன்

சமய சஞ்சீவியாகவே இருப்பவன்

சஞ்சலங்களை தீர்த்திடுவான் சகல

சௌபாக்கியங்கள் அளித்திடுவான்

சிரஞ்சீவியாய் இருக்கும் ஆஞ்சனேயன்

அபயம் அபயம் என்று வந்தோருக்கு

அஞ்சேல் அஞ்சேல் என்றே கூறிடுவான்

அன்னை சீதையின் அன்பை பெற்ற அந்த