அஞ்சனை மைந்தனை இருகரம் கூப்பி வணங்கிடுவோம்
பல்லவி
அஞ்சனை மைந்தனை இருகரம் கூப்பி வணங்கிடுவோம்
அஞ்சாநெஞ்சனான அந்த ஶ்ரீராமபக்த சுந்தரரூபனை நாம்
அனுபல்லவி
வஞ்சனை இன்றியே யாவர்க்கும் அருள் புரிந்திடும்
சஞ்சலங்களை தீர்க்கவே என்றும் துணை இருந்திடும்
சரணம்
ஆஞ்சனேயனை தினமும் மனதில் நினைத்திடுவோம்
பஞ்சென பறந்திடுமே நமது துன்பங்கள் அனைத்தும்
கிஞ்சித்தும் பயமில்லாமல் கீர்த்திகள் பல பெறவும்
தஞ்சம் அடைவோமே சிரஞ்சீவியான மாருதியை நாம்