தும்பிக்கையோனை சதா நம்பினபேருக்கு


பல்லவி

தும்பிக்கையோனை சதா நம்பினபேருக்கு

துன்பமில்லையே என்றும் துன்பமில்லையே

அனுபல்லவி

அம்பிகையின் ஆசை செல்வனாகவே திகழும்

ஆதிமுதல்வன் அபயம் அளிப்பவனான அந்த

சரணம்

சம்புகுமாரனான அந்த மூஷிகவாகனனே நமது

சங்கடம் களைந்து சந்தோஷமளிக்கவே இங்கு

கற்பகவினாயகராய் கருணாசாகரனாய் நிற்கும்

அற்புதத்தை கண்டு அவன்தாள்களில் பணிவோமே