மரகத மீனலோசனி மதுரை மாநகரை ஆளும் தேவி
பல்லவி
மரகத மீனலோசனி மதுரை மாநகரை ஆளும் தேவி நின்
பொற்பதமே சரணம், சரணம்,அம்மா ராஜமாதங்கி
அனுபல்லவி
பரிபூரணியாய், பாண்டியகுமாரியாய் கையில் கிளி கொஞ்ச
தர்மத்தின் தலைவியாயும் தர்மஸம்வர்த்தினியாய் நிற்கும்
சரணம்
சிற்பங்கள் பல நிறைந்த இன்னிசைதூண்களும், கண்ணை
கவரும் பல கலையழகுகளும், நிறைந்த ஆலயத்தில் உன்னை
அன்னபூரணியாய், கமலாம்பிகையாய், அருட்பெரும் ஜோதியாய்
லலிதாம்பிகையாய், ஆயிரம் நாமமுடைய அம்பாளாய், ஐயன்
சுந்தரேசர் மனமகிழ் மீனாட்ஷியாய், உன் கடைக்கண் பார்வை
கிடைக்காதா என பலகோடி பக்தர்களும் சதா காத்திருக்க