தாயே காமாட்ஷி தயைபுரிவாய் ஶ்ரீ ராஜராஜேஸ்வரி


பல்லவி

தாயே காமாட்ஷி தயைபுரிவாய் ஶ்ரீ ராஜராஜேஸ்வரி

நீயே துணை தேவி கமலாம்பிகையே சரணம் சரணம்


அனுபல்லவி

சேயான இந்த சிறியோனை காத்திடுவாய் லலிதாம்பிகே

மாயோனின் சோதரியே மங்களாம்பிகையே பவானி


சரணம்

ஐயன் சுந்தரேசனுடன் ஆட்ஷி செய்யும் மீனாட்ஷியே

நெய் விளக்கு ஏற்றி நைவேத்தியங்களும் படைத்தே

மெய்யுருகி கைகூப்பி நிற்கின்றேன் உன் சந்நிதியில்

பையப்பைய உனது மனமும் கசிந்திடும் எனநம்பியே