மந்திரம் செய்தாயோ என்ன தந்திரம், செய்தாயோ நீ அம்மா


பல்லவி

மந்திரம் செய்தாயோ என்ன தந்திரம், செய்தாயோ நீ அம்மா

சுதந்திரமாய் திரிந்த உலகையே உன் கட்டுக்குள் வைக்க என்ன

அனுபல்லவி

இயற்கையை உனது கருவிகளாய் ஆக்கி நீயுமே எங்களை

இல்லத்தினுள்ளே ஒன்று சேர்ந்திருக்க தருணம் அளித்தாயோ

இசைகளாலும், தோத்திரங்களாலும், உன்னை துதிப்பதை அம்மா

இல்லங்கள் தோறும் நீயும் வந்து கேட்டு, பார்த்து ரஸிக்கிறாயோ என்ன

சரணம்

போதும் போதும், அம்மா வேதனைகள், நாங்கள் மிகவும் களைத்து விட்டோமே

சேதம் இனி வேண்டாம் தாயே, செய்த தவறை அடியார்க்கு புரிய வைத்தாயே

இனிமேலும் சோதித்தால் தாங்கமாட்டோம், தயைபுரியவே தருணம் இதம்மா

பணிவாய் நின் தாளில் சரணமடையும் பக்தர்களை காத்திடவே பூமாதேவி என்ன