வரதா நீ நிற்கின்ற இத்திருவடிகள் - அத்திகிரி வரதர் விருத்தம்


வரதா நீ நிற்கின்ற இத்திருவடிகள் மூவுலகையும் அளந்ததல்லவா

மாலோலா உன்னை இந்த சயனத் திருக்கோலத்தில் கண்ட என்

இரு கண்களிலும் கண்ணீர் வழிந்தோட மெய் சிலிர்த்து போய்

திரு காஞ்சியில் பேரருளாளனாய் எங்கள் குறை தீர்க்க வந்தே

வைகுந்தமே இந்த காஞ்சிமா நகருக்கு வந்து விட்டதோ அந்த

சொர்க்கபோகம் என்பது இதுதானோ என்றெண்ணி உன்

திருவடிகளையும் தரிசித்து புளகாங்கிதம் அடைந்தேன் அப்பா

பத்தரை மாற்று பசும் பொன்னாய் திகழும் தேவாதி தேவரே

பெருந்தேவி மன மகிழ் அத்திகிரி வரதராஜ பெருமாளே