பாவை வந்தாளே எங்கள் கோதை வந்தாளே


பல்லவி

பாவை வந்தாளே எங்கள் கோதை வந்தாளே

பாவை வந்தாளே எங்கள் ஶ்ரீவில்லிப்புத்தூருக்கு - திருப்

பாவை என்னும் பாமாலையை பாமரருக்கும் அளித்திடவே

பாவை வந்தாளே எங்கள் கோதை வந்தாளே


அனுபல்லவி

பக்தியென்னும் சாகரத்தில் மூழ்கி பாபங்களை தொலைத்து

சித்திகள் அனைத்தும் பெற்று நாங்கள் சீருடன் வாழ்வதர்க்கே


சரணம்

வாரணம்ஆயிரம் என்னும் பாசுரத்தையும் தொடுத்தே அந்த

பார்வேந்தனாம் மாயவன் ஶ்ரீரங்கனையே மனதில் நினைந்து

கார்வண்ணனாம் அந்த கண்ணனுடன் ஐக்கியமாகிய ஆண்டாளை

மார்கழியில் நாமும் திருப்பாவையை கூறி அவள் தாள் பணிவோமே