திருமாலை புகழ்ந்து அழகியதோர் மாலை தொடுத்தாளே


பல்லவி

திருமாலை புகழ்ந்து அழகியதோர் மாலை தொடுத்தாளே

பெரியாழ்வாரின் செல்லமகளாய் கிடைத்த கோதைநாயகி


அனுபல்லவி

கரியவண்ணனான கண்ணனை சதா தன்மனதில் நினைத்தே

அறியதோர் மாலையை கட்ட முத்துக்களை சேர்த்தாளே


சரணம்

ஒருநூற்று நாற்பத்து மூன்று முத்துக்களைக்கொண்டு

பெரிய பாமாலையாக தொடுத்தே அவள் அணிவித்தாளே

திருப்பாவை என்ற முத்திலேதான் எத்தனைவித அர்த்தங்கள்

அரங்கனும் ஆமோதித்து ஆசையாய் அணிந்துகொண்டானே