கூவி அழைப்பாயே நீ கூவி அழைப்பாயே
பல்லவி
கூவி அழைப்பாயே நீ கூவி அழைப்பாயே
என் உள்ளம் கவர்ந்த மாயவன் மறைந்திருக்கும் இடம் நோக்கி
சரணம் - 1
அழகிய மயில் ஆடும் சோலைதனிலே
மிக அமுதமாய் இசைபாடும் கரும் குயிலே நீ (கூவி)
சரணம் - 2
பசும் கிளிபோலவே நிறமுடைய
ஶ்ரீதரனின் பிரிவால் நான் படும் துன்பங்களைக் கூறி நீ (கூவி)
சரணம் - 3
மெல்லிய நடை போட்டு அன்னங்கள்
அசைந்தாடும் வில்லிப்புத்தூருக்கு அவரை வரச் சொல்லி நீ (கூவி)