கூவி அழைப்பாயே நீ கூவி அழைப்பாயே


பல்லவி

கூவி அழைப்பாயே நீ கூவி அழைப்பாயே

என் உள்ளம் கவர்ந்த மாயவன் மறைந்திருக்கும் இடம் நோக்கி


சரணம் - 1

அழகிய மயில் ஆடும் சோலைதனிலே

மிக அமுதமாய் இசைபாடும் கரும் குயிலே நீ (கூவி)


சரணம் - 2

பசும் கிளிபோலவே நிறமுடைய

ஶ்ரீதரனின் பிரிவால் நான் படும் துன்பங்களைக் கூறி நீ (கூவி)


சரணம் - 3

மெல்லிய நடை போட்டு அன்னங்கள்

அசைந்தாடும் வில்லிப்புத்தூருக்கு அவரை வரச் சொல்லி நீ (கூவி)