கோதையின் கனவு - அபய கரங்களை நீட்டியே
பல்லவி
அபய கரங்களை நீட்டியே என்னை அரவணைப்பாய் கோபாலா
அரங்கனே யஸோதை இளம்சிங்கா, பார்க்கடலில் துயிலும் நீ
அனுபல்லவி
பாசுரங்களால் உன்னை துதித்தே, திங்களும் நோன்பிருந்து நின்
பாத கமலங்களை பணியும் என்னை வருத்துவது நியாயமா அரங்கா
சரணம் (1)
ஓங்கி உலகளந்த உத்தமனே, நீங்காத செல்வங்களை அளித்திடும் மாயனே
ஆழிமழை கண்ணா, வட மதுரை மைந்தா, ஆயர்குல அணி விளக்கே இங்கு
குயிலினங்கள், குக்கூ, குக்கூ என கூவுவதும், ஆய்ச்சியர் தயிர் கடையும் ஓசையும்
அரங்கா, என நான் அழைப்பதும், மனதுக்கு இனியானே உனக்கு கேட்கவில்லையா
சரணம் (2)
ஆதவன் உதிக்கும் முன், மூடநெய்பெய்த பால்அமுது
மற்றும் தயிர் அமுதினையும் செய்தே நாங்கள்
கூடிவந்து, உன்னை பாசுரங்களால் துதி பாடி
சேவித்தே அமுதினையும் உனக்கு சமர்ப்பிவித்து
ஆனந்தமாகவே வலம் வந்த கோதையான என்னை
ஆட்கொள்வாயே அரங்கா, கார் முகில்வண்ணா
மற்ற என் ஆசைகளை விட்டு விட்டேன் கண்ணா
வங்கக்கடல் கடைந்த சிங்க பெருமானே உன்தன்
அபய கரங்களை நீட்டியே என்னை
அரவணைப்பாய் கோபாலா